கோவையில் தனியார் விடுதிக்குள் புகுந்து தொழிலதிபரை நிர்வாணமாக்கி பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், காந்திபுரத்தில் உள்ள விடுதியில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவர்கள் லஅறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இருவரையும் நிர்வாணமாக்கி மிரட்டியதாக தெரிகிறது.


கோவை: கோவை தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கி இருந்த தொழில் அதிபரை நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை போலீஸ் தேடி வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது தொழில் அதிபர். கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல விடுதியில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அப்போது, 3 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

பின்னர், அந்த தொழில் அதிபரையும் உடன் தங்கியிருந்த பெண்ணையும் மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், அவர்கள் 2 பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி, இதனை உங்கள் குடும்பத்தினருக்கும், வெளி உலகத்தினருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர்.

அதற்கு அந்த தொழில் அதிபர், தற்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறி உள்ளார். உடனே அவர் கையில் இருந்த ரூ.1000 மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக் கொண்ட அவர்கள் நாங்கள் கேட்கும்போது எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் வர வேண்டும் என கூறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மிரட்டலுக்கு ஆளான தொழில் அதிபர் அருகில் உள்ள காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். தொழில் அதிபருடன் தங்கியிருந்த பெண்ணுக்கும், அந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தொழில் அதிபரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அந்த பெண், சரியான நேரம் பார்த்து அந்த கும்பலை அங்கு வரவழைத்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் தொழில் அதிபருடன் சென்ற பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணை பிடித்தால் உண்மை வெளியே வரும் என்பதால்,அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர் தங்கியிருந்த ஓட்டலில் பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல் இதேபோல் பல தொழில்அதிபர்களை மிரட்டி பணம் பறித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...