கோவை மாநகராட்சியில் 4-நாளில் ரூ.4.5-கோடி சொத்து வரி வசூல்..!

8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.


கோவை: சொத்து வரி மற்றும் குப்பை கட்டணம் வசூலில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

சீராய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொத்து வரி வசூல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், நான்கு நாட்களில், 4.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களாக, வரி வசூல் செய்யப்படவில்லை. மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, சொத்து வரியை உயர்த்தி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின், கடந்த, 7-ம் தேதியிலிருந்து மீண்டும் சொத்து வரி வசூல் துவங்கியுள்ளது. முதல் நாளான 7-ம் தேதி, 32-லட்சம் ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து, 8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

குப்பை கட்டணமாக, முதல் நாளில் 1.90-லட்சம் ரூபாய்; 2-ம் நாளில் 6.90-லட்சம் ரூபாய்; 3-ம் நாளில் 8- லட்சம் ரூபாய்; 4-ம் நாளில் 6.80-லட்சம் ரூபாய் என, நான்கு நாட்களில், 17.60 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...