கோவை பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44.5-சவரன் நகை மற்றும் 20-லட்சம் பணம் கொள்ளை..!

புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்படி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3-தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44.5 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக, 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் பழனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஜெயசித்ரா(48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது, மகளின் பூப்பு நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான பழனிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி அன்று குடும்பத்துடன் சென்றனர்.



இந்நிலையில், திங்கட்கிழமை காலை வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த காவலர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சரவணகுமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து ஊர் திரும்பிய சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர், வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 44.5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 20 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து, சரவணகுமாரின் மனைவி ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...