புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்படி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3-தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44.5 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக, 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் பழனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜெயசித்ரா(48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது, மகளின் பூப்பு நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான பழனிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி அன்று குடும்பத்துடன் சென்றனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த காவலர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சரவணகுமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து ஊர் திரும்பிய சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர், வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 44.5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 20 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணகுமாரின் மனைவி ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் பழனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜெயசித்ரா(48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது, மகளின் பூப்பு நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான பழனிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி அன்று குடும்பத்துடன் சென்றனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை காலை வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த காவலர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சரவணகுமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து ஊர் திரும்பிய சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர், வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 44.5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 20 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணகுமாரின் மனைவி ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.