கோவை நீலாம்பூரில் பெட்டி கடையில் இருந்து 65 கிலோ குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

நீலம்பூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கிருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை நீலம்பூரில் ரூ.1.15 லட்சம்மதிப்புள்ள65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை , உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், சூலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வ பாண்டியன் சிங்காநல்லூர் பகுதி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நீலாம்பூரில் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடையில் இருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்துஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்த அதிகாரிகள், உதயகுமாரை சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர் மீது, உணவு பாதுகாப்பு துறைசார்பில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...