கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்த சிறப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 உள்ளிட்ட 4 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகரில் அமைந்துள்ள வியாசர் ஆன்மீக மையத்தில், நான்கு வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்த சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்திற்கு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 உள்ளிட்ட 4 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு, தற்போது குறைக்கப்பட்டு விட்டதாகவும், முன்பு வழங்கப்பட்டு வந்த அதே அளவு குடிநீரே தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வார்டு வாழ் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

52 லட்சத்துக்கு பதில் 36 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம்...!



அப்போது கூட்டத்தில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 5, 9, 22 உள்ளிட்ட மூன்று வார்டுகளுக்கும் சேர்த்து 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது ஆனால், தற்பொழுது 36 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீர் போதுமான அழுத்தத்தில் வழங்கப்படாத காரணத்தால் குடிநீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்வது சிரமமாக உள்ளது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும், என்றார்.

விரைவில் தீர்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கூட்டத்தில் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜான்சன், உதவிப் பொறியாளர் ராதா, குடியிருப்போர் நலச் சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...