நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய குற்றத்துக்காக, மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில், இருவரை சிறையில் அடைக்க உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறைய மற்றும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற மொட்டை கார்த்தி (36). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த டிசம்பர் 21ஆம் ஆண்டு, "இனிமேல் எந்த குற்றமும் செய்யமாட்டேன்" என நன்னடத்தை பிணைய பத்திரத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி பிணைய பத்திரத்தை மீறி அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக அவர் மீது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன் அவரை ஆஜர்படுத்திய போலீசார் பிணைய பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக அவரை 136 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல், ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ண பிரகாஷ் (32) என்பவர் எழுதிக் கொடுத்த ஓராண்டு நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி, கடந்த மே மாதம் அடிதடி வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அவரையும் மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவின் பேரில் 136 நாட்கள் சிறையில் நாட்களை கழிக்க வேண்டும் என்ற உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி பிணைய பத்திரத்தை மீறி அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக அவர் மீது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன் அவரை ஆஜர்படுத்திய போலீசார் பிணைய பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக அவரை 136 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல், ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ண பிரகாஷ் (32) என்பவர் எழுதிக் கொடுத்த ஓராண்டு நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி, கடந்த மே மாதம் அடிதடி வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அவரையும் மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவின் பேரில் 136 நாட்கள் சிறையில் நாட்களை கழிக்க வேண்டும் என்ற உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.