கோவையில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய இருவர் கோவை மற்றும் சென்னை சிறையில் அடைப்பு…!

நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய குற்றத்துக்காக, மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில், இருவரை சிறையில் அடைக்க உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறைய மற்றும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற மொட்டை கார்த்தி (36). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த டிசம்பர் 21ஆம் ஆண்டு, "இனிமேல் எந்த குற்றமும் செய்யமாட்டேன்" என நன்னடத்தை பிணைய பத்திரத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி பிணைய பத்திரத்தை மீறி அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக அவர் மீது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன் அவரை ஆஜர்படுத்திய போலீசார் பிணைய பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக அவரை 136 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ண பிரகாஷ் (32) என்பவர் எழுதிக் கொடுத்த ஓராண்டு நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி, கடந்த மே மாதம் அடிதடி வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அவரையும் மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவின் பேரில் 136 நாட்கள் சிறையில் நாட்களை கழிக்க வேண்டும் என்ற உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...