வேட்டை தடுப்பு காவலர் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை: கோவையில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலக வளாகத்தில், அனைத்து நிலை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு இன்று காலை நடந்து கொண்டிருந்தது.
அப்போது சுமார் காலை 8.45-மணி அளவில் வேட்டை தடுப்பு காவலர் குமார் என்பவர், அணிவகுப்பின் போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கோபினாரி பிரிவு வனவர் மற்றும் களப்பணியாளர்கள் அருகிலுள்ள K.R.தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பலத்த மாரடைப்பு காரணமாக குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலக வளாகத்தில், அனைத்து நிலை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு இன்று காலை நடந்து கொண்டிருந்தது.
அப்போது சுமார் காலை 8.45-மணி அளவில் வேட்டை தடுப்பு காவலர் குமார் என்பவர், அணிவகுப்பின் போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கோபினாரி பிரிவு வனவர் மற்றும் களப்பணியாளர்கள் அருகிலுள்ள K.R.தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பலத்த மாரடைப்பு காரணமாக குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.