கோவையில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு..!

வேட்டை தடுப்பு காவலர் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


கோவை: கோவையில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலக வளாகத்தில், அனைத்து நிலை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு இன்று காலை நடந்து கொண்டிருந்தது.

அப்போது சுமார் காலை 8.45-மணி அளவில் வேட்டை தடுப்பு காவலர் குமார் என்பவர், அணிவகுப்பின் போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கோபினாரி பிரிவு வனவர் மற்றும் களப்பணியாளர்கள் அருகிலுள்ள K.R.தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பலத்த மாரடைப்பு காரணமாக குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...