கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.14-அடியாக உயர்வு..!

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி நீர் மட்டம் 26.14-அடியாக உயர்ந்திருக்கிறது. இதனால், கோவைக்கு வரக்கூடிய தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் தொடர் மழையால், சிறுவாணி நீர் மட்டம், 26.14-அடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 11-நாட்களில், 691-மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கும். சிறுவாணி அணையில் தேக்கப்படும் தண்ணீரே, கோவை மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரம்.

அப்பகுதியில் பெய்யும் மழை அளவை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் கண்காணித்து வருகின்றனர். ஜூன் முதல் செப்., வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். ஆனால், கடந்த ஜூன் மாதம் போதிய மழைப்பொழிவு இல்லாததால், அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

ஜூன், 30ல், 13.15-அடியாக நீர்மட்டம் இருந்தது.இம்மாதம் (ஜூலை) முதல் தேதியிலிருந்து, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு காணப்படுகிறது. 1-ம் தேதியிலிருந்து, 10-ம் தேதி வரை, 10- நாட்களில், 637-மி.மீ., மழை பதிவாகியது. நேற்று (11ம் தேதி) காலை, 8:00 மணி வரை, அணையில், 54-மி.மீ., அடிவாரத்தில், 20-மி.மீ., பதிவானது.

26.14-அடியாக நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. கடந்த, 11-நாட்களில், 691-மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன் மூலமாக, 13-அடிக்கு நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி நீர் மட்டம் 26.14-அடியாக உயர்ந்திருக்கிறது. 30-அடியை நீர்மட்டம் தாண்டும்போது, நீர் புகு கிணற்றில் உள்ள நான்கு வால்வுகளில், மூன்று தண்ணீருக்குள் மூழ்கி விடும். கோவைக்கு வரக்கூடிய தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கும்' என்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...