கோவை சிறுவாணி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு - குடிநீர் விநியோகம் பாதிப்பு…!

சிறுவாணி அணையின் அடிவாரத்தில் முள்ளங்காடு ராஜகாளியம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப் பகுதியில் இன்று காலையில் சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. எனவே, தொண்டாமுத்தூர், பாரதி பார்க் மற்றும் தாளியூர் பகுதிகளுக்கு செல்லும் சிறுவாணி பிரதான குழாய்களுக்கு நீர்வரத்து நிறுத்தப்பட்டது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர், பாரதி பார்க் மற்றும் தாளியூர் பகுதிகளுக்கு செல்லும் சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

கோவை சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் ராட்சச குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, நீர் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் 1,000 எம்.எம். விட்டம் கொண்ட சிமெண்ட் மெயின் குழாய்கள் மூலமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கும், கோவையின் மாநகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



இந்நிலையில்‌, சிறுவாணி அணையின் அடிவாரத்தில் முள்ளங்காடு ராஜகாளியம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப் பகுதியில் இன்று காலையில் சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து வந்த குடிநீர் வாரிய ஊழியர்கள், குடிநீர் வரத்தை நிறுத்தி, குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அடர்ந்த வனப் பகுதி என்பதால் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று மாலை ஆகியும் நிறைவடையவில்லை. அப்பகுதியில், யானை நடமாட்டம் இருந்ததால், பாதிலிலேயே பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. எனவே, தொண்டாமுத்தூர், பாரதி பார்க் மற்றும் தாளியூர் பகுதிகளுக்கு செல்லும் சிறுவாணி பிரதான குழாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது: அடர்வனப்பகுதி என்பதால் குழாய் சீரமைப்பு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக ராட்சச குழாய்க்கு வரும் குடிநீர் நீர் எடுப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலையில் சென்று குழாய் உடைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை உடனடியாக செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...