கோவை மத்வராயபுரம் கிராமம் அருகில் ஆடு - மாடுகளை கொல்லும் சிறுத்தையை பிடிக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை..!

விவசாய நிலத்தில் ஏற்கெனவே யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வரும் நிலையில், தற்போது சிறுத்தை ஆடு, மாடுகளை அடித்து கொன்று வருவதாக, மலைவாழ் மக்கள் வனத்துறையினரிடம் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கல்கொத்திபதி மற்றும் நல்லூர் வயல் பகுதிகளில், ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரூர் தாலுகாவை சேர்ந்த மத்வராயபுரம் கிராமம் அருகில், கல்கொத்திபதி, நல்லூர் வயல் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

"விவசாய நிலத்தில் ஏற்கனவே யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. தற்போது சிறுத்தை ஒன்று ஆடு, மாடுகளை அடித்துக் கொன்று வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை. எங்கள் வாழ்வாதாரத்தை திரும்ப பெற வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், "பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்பகுதியில் நடமாடுவது சிறுத்தைதானா என்பது குறித்து கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்காக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...