கோவை மத்வராயபுரம் கிராமம் அருகில் ஆடு - மாடுகளை கொல்லும் சிறுத்தையை பிடிக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை..!

விவசாய நிலத்தில் ஏற்கெனவே யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வரும் நிலையில், தற்போது சிறுத்தை ஆடு, மாடுகளை அடித்து கொன்று வருவதாக, மலைவாழ் மக்கள் வனத்துறையினரிடம் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கல்கொத்திபதி மற்றும் நல்லூர் வயல் பகுதிகளில், ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரூர் தாலுகாவை சேர்ந்த மத்வராயபுரம் கிராமம் அருகில், கல்கொத்திபதி, நல்லூர் வயல் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

"விவசாய நிலத்தில் ஏற்கனவே யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. தற்போது சிறுத்தை ஒன்று ஆடு, மாடுகளை அடித்துக் கொன்று வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை. எங்கள் வாழ்வாதாரத்தை திரும்ப பெற வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், "பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்பகுதியில் நடமாடுவது சிறுத்தைதானா என்பது குறித்து கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்காக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...