அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், கோவை அதிமுக இதயதெய்வம் மாளிகையில் ஓ.பி.எஸ் உருவப்படம் உடைக்கப்பட்டது. மேலும் ஓ.பி.எஸ்க்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கோவை: அதிமுக கட்சியில் தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவங்களும் நடைபெற்றது.
இந்நிலையில், கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அகற்றி உடைத்து காலில் மிதித்து காலணியால் அடித்து பன்னீர்செல்வத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பான குழுவில் நிலவியது.