'சிங்கப்பூரில் வேலை, கைநிறைய சம்பளம்' ஏமாற்றிய நபர், பணத்தை பறிகொடுத்தவர்கள் கோவையில் புகார் மனு..!

வெற்றி கொடி கட்டு பட பாணியில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.



கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.



கோவை வடவள்ளி பகுதியில் எல்.எஸ். கன்ஸ்டிரக்ஷன் அபோர்ட் டூரிஸ்ட் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில், செய்தித்தாள்களில் அந்நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அந்நிறுவனத்தில் தொடர்பு கொண்டதாகவும், சிங்கப்பூரில் பல்வேறு இன்ஜினியரிங் வேலை, வாகன ஓட்டுநர், அட்மின் வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், விமான பயண சீட்டுகளையும் வழங்கிவிட்டு, கடந்த 8-ம் தேதி வாகனம் வந்து பிக்கப் செய்து கொண்டு சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்துவிட்டு பின் சிங்கப்பூர் அழைத்து செல்வோம் எனக் கூறியதாகவும், ஆனால் 8-ம் தேதி மதியம் வரை வாகனம் எதுவும், தங்களை பிக்கப் செய்ய வரவில்லை என்றும், அந்நிறுவனத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பொழுதும் லைன் கிடைக்காமல் இருந்ததாகவும், சிலர் நேரடியாக அங்கு சென்று பார்க்கும் பொழுது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததாகவும், பின்பு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாக தெரிவித்தனர்.



மேலும், அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்ததாகவும், இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க பட்டுள்ளதாகவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...