வார்டு எண்.100-க்குட்பட்ட மேட்டூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப்பணிகள் மற்றும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தார் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.94-க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளில் குப்பை தரம் பிரிக்கும் பணிகள் குறித்தும், தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிந்து பணிகளில் ஈடுபடுமாறும், மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடமிருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து பெறவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட்டில் ஆய்வு செய்து மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கான கடைகள் அமைத்து தக்காளி மார்க்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்னர், வார்டு எண்.95க்குட்பட்ட திருமலை நகரில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) சாலை அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடுபட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்ய பொறியாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, வார்டு எண்.100-க்குட்பட்ட மேட்டூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோயம்புத்தார் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.94-க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளில் குப்பை தரம் பிரிக்கும் பணிகள் குறித்தும், தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிந்து பணிகளில் ஈடுபடுமாறும், மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடமிருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து பெறவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட்டில் ஆய்வு செய்து மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கான கடைகள் அமைத்து தக்காளி மார்க்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்னர், வார்டு எண்.95க்குட்பட்ட திருமலை நகரில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) சாலை அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடுபட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்ய பொறியாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, வார்டு எண்.100-க்குட்பட்ட மேட்டூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.