தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளா்ச்சிப்பணிகள்‌ குறித்து கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

வார்டு எண்‌.100-க்குட்பட்ட மேட்டூர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ ரூ.15.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டடம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளா்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தார்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்.94-க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ பொதுமக்களிடம்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடமிருந்து குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து பெறவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வார்டு எண்‌.96க்குட்பட்ட சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ ஆய்வு செய்து மார்க்கெட்டில்‌ வியாபாரிகளுக்கான கடைகள்‌ அமைத்து தக்காளி மார்க்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்னர்‌, வார்டு எண்‌.95க்குட்பட்ட திருமலை நகரில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்‌கீழ் (TNSUDP) சாலை அமைக்கும்‌ பணியினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து விடுபட்ட பகுதிகளில்‌ தார்‌ சாலை அமைக்க திட்டமதிப்பீடு தயார்‌ செய்ய பொறியாளருக்கு அறிவுறுத்தியதைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.100-க்குட்பட்ட மேட்டூர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ ரூ.15.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டடம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்‌.





இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர்‌, அஸ்லாம்‌ பாஷா, சரளா, உதவி பொறியாளர்‌ சபரீஸ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...