கோவை விலாங்குறிச்சி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களின் காவல் தெய்வமாக திகழும் இக்கோவிலில், தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
கோவை: கோவையில் நடைபெற்ற பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் திருத்தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாடுகள், குதிரைகள் நடனமாடி, திருத்தேர் விழாவில் அணிவகுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோவை விலாங்குறிச்சி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களின் காவல் தெய்வமாக திகழும் இக்கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும்.

அதேபோல, இந்த ஆண்டு ஐந்தாம் வருடாபிஷேக விழா மற்றும் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்த படி உலா வந்த தேரை, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறை சாற்றும் விதமாக சிவ வாத்தியம், ஜமாப் இசை முழுங்க, மாடுகள், குதிரைகள் நடனமாடியபடி அணிவகுத்து சென்றதை அனைவரும் கண்டு ரசித்தனர்.

கோவை விலாங்குறிச்சி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களின் காவல் தெய்வமாக திகழும் இக்கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும்.
அதேபோல, இந்த ஆண்டு ஐந்தாம் வருடாபிஷேக விழா மற்றும் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்த படி உலா வந்த தேரை, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறை சாற்றும் விதமாக சிவ வாத்தியம், ஜமாப் இசை முழுங்க, மாடுகள், குதிரைகள் நடனமாடியபடி அணிவகுத்து சென்றதை அனைவரும் கண்டு ரசித்தனர்.