கோவை பொள்ளாச்சி சூலக்கல் அருகே பால்காரரை வழிமறித்து 5000-பணம் பறித்த இருவர் கைது..!

வழக்குப்பதிவு செய்து இளங்கோவன், லோகநாதன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோவன் என்பவரின் தந்தை வால்பாறை சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.


கோவை: சூலக்கல் அருகே பால்காரரை வழிமறித்து 5000-பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள துங்காவி பகுதியைச் சேர்ந்தவர் 32-வயதான முத்துக்குமார். தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் வடக்கிபாளையம் மற்றும் சூலக்கல் பகுதியில் பால் விற்பனை செய்துவிட்டு, தரைப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த நான்கு பேர் திடீரென முத்துக்குமாரை வழிமறித்ததாகத் தெரிகிறது. பின்னர், அவரிடம் இருந்து ரூபாய் ஐந்தாயிரத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, முத்துக்குமார் அந்த அடையாளம் தெரியாத நபர்களின் வாகனப்பதிவு எண்ணைக் குறித்து வைத்து, சம்பவம் தொடர்பாக வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோவன் என்பவரின் தந்தை வால்பாறை சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...