வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக 'டை' கோயம்புத்தூர் கிரீன்கான் 22 என்ற ஒரு நாள் மாநாட்டுக்கு நாடு முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், நிறுவனர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சிந்தனைவாதிகள், தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக 'டை' கோயம்புத்தூர் கிரீன்கான் "22 என்ற ஒரு நாள் மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், நிறுவனர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சிந்தனைவாதிகள், தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கிரின் கான் 22, குறித்து "டை" அமைப்பின் கோயம்புத்தூர் தலைவர் ரஞ்சனா சிங்காஸ் கூறுகையில், "கிரீன் கான் 22 என்பது தொழில் மற்றும் சூழலியல் மீதான நமது அர்ப்பணிப்பை புரிந்து கொள்ளவும். ஒருங்கிணைக்கவும் அதற்கான வழியில் செயல்படவும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியாகும்" என்றார்.
நிகழ்வில், நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் காணொளி மூலம் சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழல் மீது அக்கறையும், அதை பாதுகாக்கும் எண்ணமும் கொண்டதாக வியாபாரம்/தொழில் இருந்தால் தான் அது நிலைத்து நிற்க முடியும், என்றார்.
வேறு பிளானட்டில் வாழ முடியும் என்று பேசினாலும், அது நடக்க குறைந்தது 10 தலைமுறை ஆகும். இப்போது, இருப்பது நமக்கு இந்த ஒரு உலகம் தான் என்று புரிந்துகொண்டு செயல்பட வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். டை அமைப்பு இப்படி ஒரு நிகழ்ச்சியை அமைந்ததற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
நிகழ்வில் BJ அருண், டை அமைப்பின் குளோபல் ஹெட், டை எப்படி தொழில்முனைவோரை உருவாக்கவும், அவர்களுக்கு உதவியாகும் இருக்கின்றது என்பதை பற்றி விளக்கினார்.

பருவநிலை மாற்ற முன்னோடிகளுக்கான ஆரம்ப நிலை ஆதரவு, தண்ணீர் பாதுகாப்பு, இயற்கை அழகு, பயிர் கழிவு எரிபொருளால் இயங்கும் பேட்டரிகள், கோயில் பூக்களை மேம்படுத்துதல், பசுமை கட்டிடங்கள் மற்றும் பருவநிலை கட்டுப்பாட்டு முயற்சிகள் போன்ற பல்வேறு தளங்களில் இருந்து பலர் -- 'பேட் மேன்' என்று அழைக்கப்படும் டாக்டர் அருணாச்சலம் முருகானந்தம், கார்த்திக் சந்திரசேகர் (சங்கம் வென்ச்சர்ஸ்), ஃபர்ஹாத் காண்டிராக்டர் (சம்பவ் டிரஸ்ட்), மேகா தேசாய் ஆஷர் மற்றும் ப்ரிதேஷ் ஆஷர் (ஜூசி கெமிஸ்ட்ரி), நிஷிதா நிகிதா பலியார்சிங் (நெக்ஸஸ் பவர்), அங்கித் அகர்வால் (பூல்) ஜெ.ஜி. கிரிதர் சிஇஓ-சியாரா, ஜூய் ஜோஷி (காலநிலை கூட்டு) ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
