திருப்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


திருப்பூர்: அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்கங்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவு படி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்க உரைகளை வழங்கினர்.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...