திருப்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


திருப்பூர்: அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்கங்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவு படி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்க உரைகளை வழங்கினர்.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...