திருப்பூர் பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் துவக்கம்..!

தேர்தலில் காங் - கட்சி சார்பில் ஈஸ்வர மகாலிங்கம், அ.ம.மு.க.சார்பில் குமரவேல், பா.ஜ.க சார்பில் ராஜ், சுயேச்சைகள் சதீஷ்குமார், சின்னசாமி, ஜெயப்பிரகாஷ் என ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் இன்று துவங்கியது. பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினரான காங்கிரசை சேர்ந்த மகாலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதையடுத்து 1-வது வார்டுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் காங் - கட்சி சார்பில் ஈஸ்வர மகாலிங்கம், அ.ம.மு.க.சார்பில் குமரவேல், பா.ஜ.க சார்பில் ராஜ், சுயேச்சைகளாக சதீஷ்குமார், சின்னசாமி, ஜெயப்பிரகாஷ் என ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

1-வது வார்டில் 3,720-ஆண் வாக்காளர்கள், 3,796-பெண் வாக்காளர்கள் மற்றும் இதர பாலினத்தினர் 2- என மொத்தம் 7,518-வாக்காளர்கள் உள்ளனர்.



தேவராயன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, ஆர்.சி.துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் அரசு நடுநிலைப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு துவக்கப்பள்ளி இச்சிப்பட்டி ஆகிய, நான்கு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 11-பூத்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.



வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்ட பின்னர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 



மொத்தமுள்ள 7,518-வாக்காளருக்கு, 7,600-ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.



ஓட்டுச்சாவடியில் 48-ஊழியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...