தேர்தலில் காங் - கட்சி சார்பில் ஈஸ்வர மகாலிங்கம், அ.ம.மு.க.சார்பில் குமரவேல், பா.ஜ.க சார்பில் ராஜ், சுயேச்சைகள் சதீஷ்குமார், சின்னசாமி, ஜெயப்பிரகாஷ் என ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பூர்: பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் இன்று துவங்கியது. பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினரான காங்கிரசை சேர்ந்த மகாலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதையடுத்து 1-வது வார்டுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் காங் - கட்சி சார்பில் ஈஸ்வர மகாலிங்கம், அ.ம.மு.க.சார்பில் குமரவேல், பா.ஜ.க சார்பில் ராஜ், சுயேச்சைகளாக சதீஷ்குமார், சின்னசாமி, ஜெயப்பிரகாஷ் என ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.
1-வது வார்டில் 3,720-ஆண் வாக்காளர்கள், 3,796-பெண் வாக்காளர்கள் மற்றும் இதர பாலினத்தினர் 2- என மொத்தம் 7,518-வாக்காளர்கள் உள்ளனர்.
தேவராயன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, ஆர்.சி.துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் அரசு நடுநிலைப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு துவக்கப்பள்ளி இச்சிப்பட்டி ஆகிய, நான்கு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 11-பூத்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்ட பின்னர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மொத்தமுள்ள 7,518-வாக்காளருக்கு, 7,600-ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஓட்டுச்சாவடியில் 48-ஊழியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.