கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கடந்த 20-ஆண்டுகளாக குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால், புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், போதிய தண்ணீர் வரத்து உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்தார்.


திருப்பூர்: கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



கடந்த 20 ஆண்டுகளாக குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர் வரத்து உள்ளதால் புதிய வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

குன்னத்தூர் பேரூராட்சியில் பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே காலி பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும்.

குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிகளுக்காக ஒரு டிராக்டர் இழுவை வண்டி மட்டும் உள்ளது. இதனால் குன்னத்தூர் நகரப் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி வருகிறது.

எனவே, குப்பைகளை அகற்ற கூடுதலாக புதிய டிராக்டர் வாங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.



சட்டமன்ற உறுப்பினருடன் ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் பேரூராட்சி தலைவர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...