கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம்..!

ஆடி 18-அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை மேற்கு மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



வருகிற ஆடி 18 அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, சங்ககிரி முதல் ஓடாநிலை வரை கோவை மாநகர் சார்பாக பெருமளவில் கலந்து கொள்வது என்றும், மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சங்கனூர் பிரேம், மாநகரத் தலைவர் சுபாஷ், மாவட்ட செயலாளர் ஆ.ராதாகிருஷ்ணன் (கோவை மாநகராட்சி 18-வது வார்டு உறுப்பினர்), மகளிர் அணி செயலாளர் திருநிறைச்செல்வி, பகுதிச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...