ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (OSMA) தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு..!

சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி, செயலாளராக சந்திரசேகரன், பொருளாளர் - பிரான்சிஸ் சேவியர், மெண்டராக (Mentor) அனுஷ் ராமசாமி, முருகேசன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



கோவை: ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் (OSMA) செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



அதன்படி, சங்கத்தின் செயலாளராக சந்திரசேகரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர், மென்டாராக அனுஷ் ராமசாமி, முருகேசன் உதவி தலைவர் செந்தில்குமார் (வெள்ளகோவில்) இணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார் (பல்லடம்) மற்றும் பாரதி( திருப்பூர்) உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



தீர்மானங்கள்.

தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல், 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூல பொருட்களான காட்டன் கழிவு பஞ்சு, பனியன் கட்டிங் வேஸ்ட் உள்ளிட்டவற்றை வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய சங்கம் சார்பில் சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தரம், உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றை மேம்படுத்த உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் ஜவுளி உற்பத்தி மையங்களுக்கு நேரடியாக சென்று கண்காட்சி அமைத்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை சந்தைப்படுத்துதல் சங்கத்தின் 25 ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து விழா நடத்துவது, என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...