சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி, செயலாளராக சந்திரசேகரன், பொருளாளர் - பிரான்சிஸ் சேவியர், மெண்டராக (Mentor) அனுஷ் ராமசாமி, முருகேசன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை: ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் (OSMA) செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சங்கத்தின் செயலாளராக சந்திரசேகரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர், மென்டாராக அனுஷ் ராமசாமி, முருகேசன் உதவி தலைவர் செந்தில்குமார் (வெள்ளகோவில்) இணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார் (பல்லடம்) மற்றும் பாரதி( திருப்பூர்) உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்.
தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல், 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூல பொருட்களான காட்டன் கழிவு பஞ்சு, பனியன் கட்டிங் வேஸ்ட் உள்ளிட்டவற்றை வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய சங்கம் சார்பில் சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தரம், உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றை மேம்படுத்த உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் ஜவுளி உற்பத்தி மையங்களுக்கு நேரடியாக சென்று கண்காட்சி அமைத்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை சந்தைப்படுத்துதல் சங்கத்தின் 25 ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து விழா நடத்துவது, என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.