வார்டு எண்‌.29-மற்றும்‌ 30-க்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100-வார்டுகளிலும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க பொதுமக்களிடம்‌ தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணையாளர்‌ அறிவுறுத்தினார்‌.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29-மற்றும்‌ 30-க்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29 மற்றும்‌ 30-க்குட்பட்ட ராயப்பா லே-அவுட்‌, சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப் பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க பொதுமக்களிடம்‌ தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கணபதி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்‌ அருகிலுள்ள கணேஷ்‌ லே-அவுட்‌ முதல்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்கப்பட்டுவருவதை பாராட்டி தொடர்ந்து இப்பணிகளை செய்யமாறு கேட்டுக்கொண்ட பின்னர்‌, அப்பகுதியில்‌ தற்போது குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவரும்‌ கால அளவை குறைத்தும்‌, குடிநீர்‌ விநியோகிக்கும்‌ அளவை கூடுதலாக அதிகரித்தும்‌ வழங்க குடிநீர்‌ விநியோக பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, வார்டு எண்‌.29க்குட்பட்ட ஆவாரம்பாளையம்‌, அப்பா நாயுடு லே-அவுட்‌, இரயில்வே பாலம்‌ அருகிலுள்ள சாக்கடை கழிவுநீர்‌ கால்வாய்‌ அடைப்பை சரிசெய்து ஒருவார காலத்திற்குள்‌ தூர்வாரவும்‌, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌. பின்னர்‌, கணபதி பகுதியில்‌ பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்‌ முறைகள்‌ குறித்து கேட்டறிந்து, கணபதி பகுதியில்‌ தெருநாய்களின்‌ தொந்தரவு அதிகமாக உள்ளதால்‌, அப்பகுதியில்‌ உள்ள தெருநாய்களுக்கு சட்டப்படி கருத்தடை செய்து மீண்டும்‌ அதே பகுதியில்‌ விடுவதற்கு சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கே.ரங்கநாயகி, சரண்யா, உதவி பொறியாளர்கள்‌ நாசர்‌, மகேஷ்‌, மரகதம்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ அரவிந்த்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...