கோவை வெள்ளலூரில் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டிய நபர்களால் பரபரப்பு….!

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பள்ளி சிறுமிகளை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்ட நபர்களை தட்டிக் கேட்க சென்ற சண்முகம் (62) என்பவரை இருவரும் சேர்ந்து இளநீர் வெட்டும் அருவாளால் தாக்கினர். போத்தனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் அருகே ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற நபர்களை போத்தனூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் இரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம் (62), இவர் இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பேரன் வெள்ளலூர் எல்.ஜி.நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற பேரனை அழைத்துச் செல்ல சண்முகம் இன்று மாலை எல்.ஜி.நகர் வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பள்ளி சிறுமிகளை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது குறித்து சண்முகம் தட்டிக் கேட்க சென்ற போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அந்த நபர்கள், சண்முகத்தை அருகே இழுத்துச் சென்று இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டியுள்ளனர்.

சண்முகம் அவர்களை தடுத்ததால் இரண்டு கைகளிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்து, அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, சண்முகம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சண்முகத்தை அரிவாளால் வெட்டியது, போத்தனூர் பகுதியை சேர்ந்த சேட்டு அன்னியன் என்ற நபர் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...