சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளை கோவை‌ மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு..!

ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளின்‌ ஒருபகுதியாக தாமஸ்‌ பார்க்‌ பகுதியில்‌ அமையவுள்ள தீவுத்திடல்‌, பூங்கா மற்றும்‌ பெண்கள்‌ கழிவறை கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.


கோவை: மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌ இணைந்து படகுக்குழாம்‌ (Boat House) பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. அதன்‌ சோதனை ஓட்டமாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளின்‌ ஒருபகுதியாக தாமஸ்‌ பார்க்‌ பகுதியில்‌ அமையவுள்ள தீவுத்திடல்‌, பூங்கா மற்றும்‌ பெண்கள்‌ கழிவறை கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனிடையே, மாநகராட்சி உக்கடம்‌ வாலாங்குளக்கரைகளில்‌ சீர்மிகுநகர திட்டத்தின்கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகள்‌ நடைபெற்றுவருவதன்‌ ஒருபகுதியாக அப்பகுதியில்‌ உணவுக்கூடங்கள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌ வாகனம்‌ நிறுத்துமிடங்கள்‌ கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



மேலும், மாநகராட்சி, மத்திய மண்டலத்தில்‌ சீர்மிகுநகரத்திட்டத்தின்‌ கீழ்‌ வார்டு எண்‌.83க்குட்பட்ட ஆடிஸ்‌ வீதியில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்நிகழ்வில், மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, பொது மேலாளர்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி) பாஸ்கரன்‌, சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி செயற்பொறியாளர்‌ குணசேகரன்‌, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...