கோவையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை…!

கோவையில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் (27). கட்டிட தொழிலாளி இவரது மனைவி ஷாலினி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பூபாலன் தனது சொந்த ஊரான சூலூருக்கு சென்று தங்கி, அங்கிருந்து பணிக்குச் சென்றுள்ளார்.

மேலும், வாரம் ஒரு முறை தனது குழந்தைகளை பார்க்க ரத்தினபுரி வரும் பூபாலன், பார்த்து விட்டு பணம் கொடுத்துவிட்டு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று பூபாலன் வீட்டிற்கு வந்த போது, ஷாலினிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக அப்பகுதி அக்கம்பக்கத்தினர் கூறியதாக தெரிவித்து, ஷாலினியிடம், பூபாலன் சண்டை போட்டுள்ளார்.

இதில், ஷாலினி பூபாலனை தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என கூறி, இறங்கிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் மது போதையில், அதிகாலை 4-மணிக்கு வந்த பூபாலன் கத்தியால் ஷாலினியை குத்தியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஷானிலியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மனைவி இறந்து விட்டார் என்ற பயத்திலிருந்த பூபாலன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மனைவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்து கொண்ட பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...