கோவையில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல், மற்றும் முற்றுகை போராட்டம்..!

போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அறிவொளி நகர் செல்லும் சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இன்று அந்த கடை திறக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு கூடிய சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அங்கிருந்த சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகள் இருக்கக்கூடிய இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் கடையை திறக்க வந்ததாக தெரிவித்தனர்.

தற்போது போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் தாங்கள் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...