போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கோவை: கோவை அறிவொளி நகர் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அறிவொளி நகர் செல்லும் சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று அந்த கடை திறக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு கூடிய சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்த சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகள் இருக்கக்கூடிய இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் கடையை திறக்க வந்ததாக தெரிவித்தனர்.
தற்போது போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் தாங்கள் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.
கோவை அறிவொளி நகர் செல்லும் சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று அந்த கடை திறக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு கூடிய சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகள் இருக்கக்கூடிய இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் கடையை திறக்க வந்ததாக தெரிவித்தனர்.
தற்போது போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் தாங்கள் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.