கோவை பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறை..!

நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூபாய் 2-லட்சம் மதிப்பிலான 10-அரசு லேப்டாப்பை திருடிய வழக்கில் 8-ஆண்டுகள் கழித்து 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் இலவச மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்குள்ள 10 மடிக்கணினிகள் காணாமல் போனதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோபால்சாமி 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில், மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் உடுமலை ரோடு மரப்பேட்டை வீதியைச் சேர்ந்த பால ரகுபதிராஜ் ஆகியோர் இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 மேஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பத்து அரசு லேப்டாப்பை திருடிய வழக்கில் 8-ஆண்டுகள் கழித்து இருவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...