கோவை பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறை..!

நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூபாய் 2-லட்சம் மதிப்பிலான 10-அரசு லேப்டாப்பை திருடிய வழக்கில் 8-ஆண்டுகள் கழித்து 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் இலவச மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்குள்ள 10 மடிக்கணினிகள் காணாமல் போனதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோபால்சாமி 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில், மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் உடுமலை ரோடு மரப்பேட்டை வீதியைச் சேர்ந்த பால ரகுபதிராஜ் ஆகியோர் இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 மேஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பத்து அரசு லேப்டாப்பை திருடிய வழக்கில் 8-ஆண்டுகள் கழித்து இருவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...