தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பொள்ளாச்சி கோவை ரோடு ஆச்சிபட்டி அருகே உள்ள தனியார் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இன்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சியில் ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சியில் வரும் ஜூலை 15-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இதற்காக பொள்ளாச்சி கோவை ரோடு ஆச்சிபட்டி அருகே உள்ள தனியார் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இன்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் திருமதி, தமிழ்மணி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.