கோவை பொள்ளாச்சியில் திருடிய நகையோடு தலைதெறிக்க தப்பி ஓடிய ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயின்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடையில் இருந்து நகை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில், நகைக்கடையில் இருந்து தங்க செயின்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்த நபர் ஒருவர், ஊழியரிடம் நகைகளை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து வெவ்வேறு டிசைன்களில் நகைகளை எடுத்து அந்த நபருக்கு காண்பித்து வந்தனர்.

திடீரென அந்த நபர் மேஜையில் இருந்த நகைகளுடன் வெளியே தப்பி ஓடினார். இதையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை துரத்திச் சென்றபோது, அந்த நபர் தவறி கீழே விழுந்தார்.



பின்னர் நகை திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை பிடித்த பொதுமக்கள் அவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இடுக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய்(43) என்பது தெரியவந்தது.

பின்னர் நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடையில் இருந்து நகை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...