கோவை பொள்ளாச்சியில் திருடிய நகையோடு தலைதெறிக்க தப்பி ஓடிய ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயின்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடையில் இருந்து நகை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில், நகைக்கடையில் இருந்து தங்க செயின்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்த நபர் ஒருவர், ஊழியரிடம் நகைகளை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து வெவ்வேறு டிசைன்களில் நகைகளை எடுத்து அந்த நபருக்கு காண்பித்து வந்தனர்.

திடீரென அந்த நபர் மேஜையில் இருந்த நகைகளுடன் வெளியே தப்பி ஓடினார். இதையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை துரத்திச் சென்றபோது, அந்த நபர் தவறி கீழே விழுந்தார்.



பின்னர் நகை திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை பிடித்த பொதுமக்கள் அவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இடுக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய்(43) என்பது தெரியவந்தது.

பின்னர் நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடையில் இருந்து நகை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...