கோவை குரும்பபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் புகுந்து 20 லிட்டர் பெட்ரோல் திருட்டு - இளைஞர் கைது….!

இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் தப்பினர்.


கோவை: கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்த போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை, நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த காவலாளி, அவர்களை பிடிக்க, முயற்சி செய்தும் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

பின்னர், குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த இளைஞர்களை தேடினார். அப்போது, தப்பிச் சென்றமூவரில், ஒருவரை பார்த்துள்ளனர். உடனே, காவலாளி குணசேகரன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.

விசாரணையில், பிடிபட்ட நபர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது இரு நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...