இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் தப்பினர்.
கோவை: கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்த போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை, நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த காவலாளி, அவர்களை பிடிக்க, முயற்சி செய்தும் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.
பின்னர், குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த இளைஞர்களை தேடினார். அப்போது, தப்பிச் சென்றமூவரில், ஒருவரை பார்த்துள்ளனர். உடனே, காவலாளி குணசேகரன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.
விசாரணையில், பிடிபட்ட நபர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது இரு நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்த போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை, நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த காவலாளி, அவர்களை பிடிக்க, முயற்சி செய்தும் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.
பின்னர், குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த இளைஞர்களை தேடினார். அப்போது, தப்பிச் சென்றமூவரில், ஒருவரை பார்த்துள்ளனர். உடனே, காவலாளி குணசேகரன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.
விசாரணையில், பிடிபட்ட நபர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது இரு நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.