ரூ 1.46-கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மைய கட்டப்பணிகளை மேயர்‌ மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டு ஆய்வு..!

மாநகராட்சி கிழக்கு மற்றும்‌ வடக்கு மண்டலத்தில்‌ ரூ 1.46-கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ நகர்நல மைய கட்டப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மற்றும்‌ வடக்கு மண்டலத்தில்‌ ரூ 1.46 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மைய கட்டப்பணிகளை மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப், ஆகியோர்‌ இன்று (05.07.2022) நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பீளமேட்டில்‌ ரூ.99 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ தேசிய நகாப்புற நல்வாழ்வு மையம்‌ மற்றும்‌ ரூ.22 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஆய்வகம்‌ ஆகியவற்றை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



அதனைத்‌ தொடர்ந்து பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்‌. அப்போது சிகிச்சைக்காக வந்த தாய்மார்களிடம்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, சிகிச்சை திருப்திகரமாக உள்ளதா, மருந்து மாத்திரைகள்‌ சரியான நேரத்தில்‌ தருகிறார்களா, மகப்பேறு நிதி உதவி கிடைக்கிறதா என்பது குறித்தும்‌ கேட்டறிந்தனர்‌. மேலும்‌, மருந்தகம்‌ சென்று தேவையான மருந்து மாத்திரைகள்‌ இருப்பு உள்ளதா என்பது குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



அதன்‌ பின்னர், பீளமேட்டில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மையத்தை ஆய்வு செய்து, கட்டுமானப்பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ கட்டி முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென பொறியாளர்களிடம்‌ அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, பீளமேடு பகுதியில்‌ செயல்பட்டுவரும்‌ குப்பையை தரம்‌ பிரித்து அனுப்பும்‌ பகுதிக்கு சென்று பார்வையிட்டு மக்கும்‌ குப்பைகளை கொண்டு வரும்‌ வாகனங்களில்‌ உள்ள குப்பைகளை விரைவாக பெற்று மீண்டும்‌ சம்பந்தப்பட்ட பகுதிக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்திய பின்னர்‌, குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பகுதியை சுத்தமாக பராமரித்து பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து சத்தி சாலையில்‌ உள்ள மாடு அறுவைமனையை பார்வையிட்ட பின்னர்‌ நல்லாம்பாளையம்‌ சக்தி நகா்‌ பகுதியில்‌ உள்ள ரயில்வே தரைப்பாலத்தை பார்வையிட்டு மழைக்காலங்களில்‌ தேங்கும்‌ மழைநீரை அதிக மோட்டார்‌ பொருத்தி மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, உதவி ஆணையர்கள்‌ சங்கர்‌, மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர், நகார்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார் மண்டல சுகாதார ஆய்வாளர்‌ இராதாகிருஷ்ணன்‌, மருத்துவர்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...