தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, ஆழியார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அருவியில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியாறு அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஆழியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அருவியில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியாறு அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஆழியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.