மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம்..!

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, ஆழியார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அருவியில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியாறு அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஆழியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...