தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு கோவை TNAU-வில் பூச்சி அருங்காட்சியகத்தில் ஆய்வு..!

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி கோவையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அக்குழுவின் தலைவர் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் ஆய்வு கூட்டம் அக்குழுவின் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் அங்குள்ள பூச்சி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.



இந்த ஆய்வு அக்குழுவின் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த இராமகிருஷ்ணன், தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி கோவையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

மகளிர் மேம்பாட்டு திட்டம் முதல்வர் நேசிக்கின்ற திட்டம் எனவும், தமிழகத்தில் 3-லட்சத்து 95-ஆயிரம் குழுக்கள் உள்ளது எனவும் கூறினார். கடந்த 20-ஆண்டுகளில் 1-லட்சம் கோடி மக்களுக்கு சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவையை பொறுத்தவரை, 228-ஊராட்சி பகுதிகளில் 5654-மகளிர் சுய உதவி குழுவும் வட்டார பகுதிகளில் 6794-குழுவும் முறையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்கு மாவட்ட ஆட்சியரை பாராட்டுவதாகவும் கூறினார். தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் 28-இணைப்பு கல்லூரிகள் செயல்படுவதாகவும், 35-முதுகலை பட்டம் 14-இளங்கலை பட்டம், 30-பி.எச்.டி பட்டம் உள்ளது எனவும், இங்கு தமிழ் வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் இதனை செம்மொழிக்கு கிடைத்த அந்தஸ்தாக கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், இங்கு மாவட்ட வேளாண் அறிவியல் மையம் துவக்கப்பட்டு, அனைத்து விவசாயிகள் பெண்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இங்கு 166-பண்ணை கருவிகள் விவசாயிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், 1000-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இந்த இரண்டு ஆய்வுகளும் பயனுள்ள ஆய்வுகளாக அமைந்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உட்பட அக்குழுவைச் சேர்ந்தவர்கள் வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...