வார்டு எண்: 90 அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு; காலதாமதமாக நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!

கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது குறித்து கேட்ட திமுக கவுன்சிலரை, அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட சிலர் தாக்கிய சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை தாமதமாக கையாண்ட, குனியமுத்தூர் சிறப்பு உதவி காவல் ஆணையாளரை, காவல் ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முறையாக புகாரை, விசாரிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது, குறித்து கடந்த 3 ம் தேதி இரவு திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கேள்வி எழுப்பினார். அப்போது, கார்த்திகேயனை, 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அபுதாகீர், ஜான்சன், சத்ரக் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

இதில், காயமடைந்த கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நள்ளிரவு தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் 3 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...