கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது குறித்து கேட்ட திமுக கவுன்சிலரை, அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட சிலர் தாக்கிய சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை தாமதமாக கையாண்ட, குனியமுத்தூர் சிறப்பு உதவி காவல் ஆணையாளரை, காவல் ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முறையாக புகாரை, விசாரிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது, குறித்து கடந்த 3 ம் தேதி இரவு திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கேள்வி எழுப்பினார். அப்போது, கார்த்திகேயனை, 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அபுதாகீர், ஜான்சன், சத்ரக் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.
இதில், காயமடைந்த கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நள்ளிரவு தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் 3 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.
கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது, குறித்து கடந்த 3 ம் தேதி இரவு திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கேள்வி எழுப்பினார். அப்போது, கார்த்திகேயனை, 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அபுதாகீர், ஜான்சன், சத்ரக் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.
இதில், காயமடைந்த கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நள்ளிரவு தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் 3 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.