சிர்சா பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஐ.பி.எஸ்., ஆகியோருக்கு கோவையில் வரவேற்பு..!

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சிர்சா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஆகியோர் கோவை வந்துள்ளனர். இருவருக்கும் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வந்த சிர்சா பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஐ.பி.எஸ்., ஆகியோருக்கு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி உற்சவம் நாற்று நடவு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடப்படும்.

இந்த விழாவில் கலந்து கொள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சிர்சா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஆகியோர் கோவை வந்துள்ளனர்.



கோவை வந்த இருவருக்கும் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றுதல் கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கலிடம் மனு வழங்கப்பட்டது.

மனுவை வாங்கிய அவர், இது குறித்து பாராளுமன்றத்தில் பேச உள்ளதாகவும், மேலும் பிரதமரை சந்தித்து தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து பேச உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...