கணவனை பிரிந்த நிலையில், வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு பொய் கர்ப்பத்தை மெய்யாக்க கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிய தாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை: பொய் கர்ப்பத்தை மெய்யாக்க கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிய தாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் யூனஸ்- திவ்யபாரதி தம்பதியருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் அந்த குழந்தை திருடப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதுவிலக்கு அமலாக்க துணை காவல் கண்காணிப்பாளர், செல்வராஜ் மற்றும் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலையில், இச்சம்பவம் போலீசாருக்கு சவாலாக இருந்தது. மேலும், மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள கேமராக்கள் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியிலுள்ள 150 சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், குழந்தைகளைக் கடத்தி சென்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கேரளா விரைந்த காவல்துறையினர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த 34-வயதான ஜெமினா மற்றும் அவருடன் இருந்த நபர் ஒருவரையும் பிடித்தனர். ஜெமினாவை விசாரணை செய்ததில், அவர் தனது கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று தீர்மானித்தன் பேரில் ஜெமினா கர்ப்பமாக இருப்பது போல போலியாக நடித்து வந்துள்ளார். மேலும், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் கூறியுள்ளார்.
மணிகண்டன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்டதை அடுத்து, பொள்ளாச்சியைச் சேர்ந்த யூனஸ் - திவ்யபாரதி தம்பதியினரின் குழந்தையைக் கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்டு போலீசார் குழந்தையை உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வழக்கில் குறித்த விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் யூனஸ்- திவ்யபாரதி தம்பதியருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் அந்த குழந்தை திருடப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதுவிலக்கு அமலாக்க துணை காவல் கண்காணிப்பாளர், செல்வராஜ் மற்றும் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலையில், இச்சம்பவம் போலீசாருக்கு சவாலாக இருந்தது. மேலும், மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள கேமராக்கள் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியிலுள்ள 150 சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், குழந்தைகளைக் கடத்தி சென்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கேரளா விரைந்த காவல்துறையினர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த 34-வயதான ஜெமினா மற்றும் அவருடன் இருந்த நபர் ஒருவரையும் பிடித்தனர். ஜெமினாவை விசாரணை செய்ததில், அவர் தனது கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று தீர்மானித்தன் பேரில் ஜெமினா கர்ப்பமாக இருப்பது போல போலியாக நடித்து வந்துள்ளார். மேலும், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் கூறியுள்ளார்.
மணிகண்டன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்டதை அடுத்து, பொள்ளாச்சியைச் சேர்ந்த யூனஸ் - திவ்யபாரதி தம்பதியினரின் குழந்தையைக் கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்டு போலீசார் குழந்தையை உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வழக்கில் குறித்த விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.