கவர்க்கல் பகுதி அருகே அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், பொள்ளாச்சியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், அதிக மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு மோதி ஏற்பட்ட விபத்து, தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து இன்று காலை ஆறு மணிக்கு கருமலை எஸ்டேட். வழியாக அரசு பேருந்து ஒன்று கோவைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து கவர்க்கல், ஊமாண்டி முடக்கு என்ற இடம் அருகே வந்த போது, அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்துள்ளது.

அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வாட்டர்பால் பகுதி போலீசார் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து இன்று காலை ஆறு மணிக்கு கருமலை எஸ்டேட். வழியாக அரசு பேருந்து ஒன்று கோவைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து கவர்க்கல், ஊமாண்டி முடக்கு என்ற இடம் அருகே வந்த போது, அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்துள்ளது.
அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வாட்டர்பால் பகுதி போலீசார் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.