வால்பாறையில் அரசு பேருந்து - லாரி நேருக்கு மோதி விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கவர்க்கல் பகுதி அருகே அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், பொள்ளாச்சியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், அதிக மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு மோதி ஏற்பட்ட விபத்து, தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து இன்று காலை ஆறு மணிக்கு கருமலை எஸ்டேட். வழியாக அரசு பேருந்து ஒன்று கோவைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து கவர்க்கல், ஊமாண்டி முடக்கு என்ற இடம் அருகே வந்த போது, அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்துள்ளது.



அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.



விபத்து குறித்து தகவல் அறிந்த வாட்டர்பால் பகுதி போலீசார் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...