பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்..!

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யூனிஸ் என்பவரது மனைவி திவ்யபாரதிக்கு, கடந்த புதன்கிழமை அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த நான்கே நாட்கள் ஆன பெண் குழந்தையை, இன்று அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத யாரோ கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை பணத்திற்காக செய்வதற்காக கடத்தப்பட்டதா..? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மூன்று துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து காணாமல் போன குழந்தையை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...