வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்த போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
கோவை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மெத்தை வியாபாரம் செய்து வரும் இவர், இன்று பொள்ளாச்சிக்கு அலுவலக வேலையாக வந்துள்ளார். அவருடன், அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் மனோஜ் என மூவர் காரில் வந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் அலுவலக வேலையை முடித்து விட்டு, பின்பு எர்ணாகுளம் பகுதிக்கு செல்வதற்காக வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.

விபத்தில், பயணித்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மூவரையும் அங்குள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் அலுவலக வேலையை முடித்து விட்டு, பின்பு எர்ணாகுளம் பகுதிக்கு செல்வதற்காக வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
விபத்தில், பயணித்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மூவரையும் அங்குள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.