வால்பாறையில் விபத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்தவர் பலி; 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!

வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்த போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.


கோவை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மெத்தை வியாபாரம் செய்து வரும் இவர், இன்று பொள்ளாச்சிக்கு அலுவலக வேலையாக வந்துள்ளார். அவருடன், அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் மனோஜ் என மூவர் காரில் வந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் அலுவலக வேலையை முடித்து விட்டு, பின்பு எர்ணாகுளம் பகுதிக்கு செல்வதற்காக வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்தனர்.



அப்போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.



விபத்தில், பயணித்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மூவரையும் அங்குள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...