கோவையில் தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளக் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளக் கொள்ளையை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளக் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அளவிற்கு அதிகமாக கனிம வளங்களை கொள்ளை அடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அப்பகுதியில் இயங்கி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு தடை விதித்து சீல் வைத்துள்ளது.

இருப்பினும், அவ்வப்போது அங்கிருந்து மண் மற்றும் செங்கற்கள் திருடப்பட்டு வேறு இடத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்திலும், அவ்வப்போது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த கனிம வள கொள்ளையை கண்டித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன மற்றும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் "தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி அரசு அனுமதியின்றி செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும், கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்குத் துணை புரிந்த கனிம வளத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பகுதியில், பெய்யும் மழை நீரை சங்கனூர் கௌசிகா நதியில் வரும்படி வழிவகை செய்ய வேண்டும், சின்ன தடாகம் நஞ்சுண்டாபுரம் வீரபாண்டி கிராமங்களில் செங்கல் சூளை தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...