கோவை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு: பால் பாக்கெட்டுகள் உடைந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை..!

ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் கோவை ஆர்.எஸ்.புரம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆவின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எவ்வாறு பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது, மற்றும் பேக்கிங் முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பால் பாக்கெட்டுகள் உடைந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை ஆர் எஸ் புரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, சுந்தரேசன் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஆவின் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் உடைந்து வந்ததால், முகவர்கள் நஷ்டமடைந்து உள்ளனர்.

ஒரு சில பாக்கெட்டுகளில் ஓட்டை ஏற்பட்டு குறைவான பாலோடும், ஒரு சில இடங்களில் காலி கவர்களாவும் வந்துள்ளது. குறிப்பாக 150-லிட்டர் பாலில், 25-லிட்டர் வீணாகி உள்ளது. இதனால் முகவர்களின் முதலீடு பணத்திலேயே நஷ்டம் ஏற்படும் நிலையில், இது குறித்து, ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் புகார் அளித்தது.

அதில் முறையாகப் பால் விநியோகம் செய்யமல், எதில் ஊழல் செய்யலாம் என அதிகாரிகள் காத்திருப்பதாகவும், இதனால் முகவர்கள் மட்டுமின்றி ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் இன்று காலை முதல் கோவை ஆர்.எஸ்.புரம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆவின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எவ்வாறு பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது, மற்றும் பேக்கிங் முறைகளை ஆய்வு செய்தனர். மேலும் முறையாகக் கண்காணிக்கவும் அதிகாரிக்கு உத்தர விட்டுச் சென்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...